Thursday, February 14, 2008

இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ!!!

கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெறும் தேசவிரோதிகளின் கூக்குரல் மற்றும் கெலை வெறி தாக்குதல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராஜ் தாக்கரே என்ற மனித குல விரோதி தனது நவநிர்மான் சே என்ற குண்டர் படையை வைத்து கொண்டு வெளிமாநிலத்தவர்களை மராட்டிய மண்ணில் இருந்து விரட்டியடிக்க தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.இதன் காரணமாக மும்பை நகர காவல்துறை அவன் மீது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டனர். வழக்கு பதிவு செய்து விட்ட காரணத்தல் கடந்த நான்கு நாட்களாக கைது செய்யப்படுவான் என்று பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தனர்.ஆனால் நடந்தது என்ன? நேற்று பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஒருவன் கைது செய்த ஒரு சில மணி நேரத்தில் பிணையில் வெளிவருகிறான்.இந்த கேலி கூத்திற்கு யார் காரணம். சட்டமா ? ஆட்சியாளர்களா ? இல்லை உயர் ஜாதி பார்பணர்களா ? வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆனால் கைது செய்யபட்டு நிதீபதியின் முன் நிறுத்தய உடன் பிணை ! என்ணே ஒரு அரசியல் சட்டம் !! இங்கே ஒரு சம்பவம் இதில் இருந்து தெரியும் பார்பண அதிகாரம்.கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் 31 அன்று நள்ளிரவு ஒரு சூத்திரன் கைது செய்யபடுகிறான் 6 கோடி திராவிடதமிழர்களின் தலைவன் முன்னால் முதல்வர் 75 வயது நிரம்பிய பெரியவர். ஒரு ஆதாரமற்ற வழக்கிற்காக .அவரது வயதை கணக்கில் கொண்டு பிணை மறுக்கபடுகிறது.வழக்கு ஒன்றும் இனகலவத்தையே மத கலவரத்தையே தூண்டிய வழக்கும் அல்ல ஆனால் பிணை மறுக்கபடுகிறது.ஏன் தெரியுமா ? இங்கு அப்போது ஒரு பார்பண சனாதன ஆணவகாரி ஜெயலலிதாவின் ஆட்சி. ஆனால் இன்று மும்பையில் ஒரு உயர்ஜாதி பார்பணன் கைது செய்தஉடன் பிணை, இங்கு நடைபெறுவது அம்பேத்கார் இயற்றி சட்டமா ? இல்லை பார்பண வறுணாசிர சட்டமா? இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ

போராளி