திருகுர்ஆனில் வரும் சில வசனங்கள்...........
நம் வாழ்வில் அன்றாடம் பெற்றோர் குழந்தைகள் அன்டைய வீட்டார் நன்பர்கள் தொழில் கூட்டாளிகள் வழிப்போக்கர்கள் என பலரை சந்தித்து பேசுகின்றோம்.இவ்வாறு நாம் சந்திக்கின்ற நபர்களிடம் எவ்வாறு பேசவேண்டும் என்று வகுத்துக்கொடுத்துள்ளது குர்ஆன்.பேசுகின்ற போது உண்மையை நேர்மையாக அழகாக கனிவாக நியாயமாக அன்பாகவும் பேச சொல்கின்றது.அதை போல் வீண்பேச்சை தவீர்க்கவும் பொய் பேசாதீர் எனவும் புறம் பேசாதீர் எனவும் ஆதாரமின்றி பேசாதீர் எனவும் அவதூறு பேசாதீர் எனவும் கன்டிக்கின்றது. அவற்றில் பின்வரும் குர்ஆன் வசனங்கள் காணவும்.
உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23
Friday, February 29, 2008
Tuesday, February 26, 2008
சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி... ...

ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம். இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை. வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது. அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது. சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது. இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன. எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன. ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை. ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார். அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன. உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம். இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை. வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது. அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது. சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது. இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன. எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன. ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை. ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார். அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன. உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
Thursday, February 14, 2008
இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ!!!
கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெறும் தேசவிரோதிகளின் கூக்குரல் மற்றும் கெலை வெறி தாக்குதல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராஜ் தாக்கரே என்ற மனித குல விரோதி தனது நவநிர்மான் சே என்ற குண்டர் படையை வைத்து கொண்டு வெளிமாநிலத்தவர்களை மராட்டிய மண்ணில் இருந்து விரட்டியடிக்க தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.இதன் காரணமாக மும்பை நகர காவல்துறை அவன் மீது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டனர். வழக்கு பதிவு செய்து விட்ட காரணத்தல் கடந்த நான்கு நாட்களாக கைது செய்யப்படுவான் என்று பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தனர்.ஆனால் நடந்தது என்ன? நேற்று பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஒருவன் கைது செய்த ஒரு சில மணி நேரத்தில் பிணையில் வெளிவருகிறான்.இந்த கேலி கூத்திற்கு யார் காரணம். சட்டமா ? ஆட்சியாளர்களா ? இல்லை உயர் ஜாதி பார்பணர்களா ? வழக்கு பதிவு செய்யப்பட்டதோ பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆனால் கைது செய்யபட்டு நிதீபதியின் முன் நிறுத்தய உடன் பிணை ! என்ணே ஒரு அரசியல் சட்டம் !! இங்கே ஒரு சம்பவம் இதில் இருந்து தெரியும் பார்பண அதிகாரம்.கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் 31 அன்று நள்ளிரவு ஒரு சூத்திரன் கைது செய்யபடுகிறான் 6 கோடி திராவிடதமிழர்களின் தலைவன் முன்னால் முதல்வர் 75 வயது நிரம்பிய பெரியவர். ஒரு ஆதாரமற்ற வழக்கிற்காக .அவரது வயதை கணக்கில் கொண்டு பிணை மறுக்கபடுகிறது.வழக்கு ஒன்றும் இனகலவத்தையே மத கலவரத்தையே தூண்டிய வழக்கும் அல்ல ஆனால் பிணை மறுக்கபடுகிறது.ஏன் தெரியுமா ? இங்கு அப்போது ஒரு பார்பண சனாதன ஆணவகாரி ஜெயலலிதாவின் ஆட்சி. ஆனால் இன்று மும்பையில் ஒரு உயர்ஜாதி பார்பணன் கைது செய்தஉடன் பிணை, இங்கு நடைபெறுவது அம்பேத்கார் இயற்றி சட்டமா ? இல்லை பார்பண வறுணாசிர சட்டமா? இந்த இழி நிலை போக்க நம்மிடையே பெரியார் இல்லையோ
போராளி
போராளி
அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற இந்து பயங்கரவாதி
நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஒருவன் செய்தால் அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்? அனைவரும் ஒருமித்தக் குரலில் ஏற்றுக் கொள்வது, அரசு இடத்தைக் கள்ளத்தனமாக ஆக்ரமித்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அதுவே அரசு இடத்தில் கள்ளத்தனமாகப் பள்ளிவாசல், சர்ச், கோயில் இன்னபிற வழிபாட்டுத் தலங்களை யாராவது எழுப்பி விட்டால் என்ன செய்வது? சாதாரணமாக அரசு செய்யும் காரியம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு யாராவது பொறுப்பாளர் இருப்பின் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அவ்விடத்தை மீட்பதாகும். அவ்வாறு ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு என்னுமிடத்தில் நடந்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையுடன் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் உலகிலிருந்தே "அகற்றும்" பணி சுற்றிக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பட்டப்பகலிலேயே நடைபெற்றது. சம்பவம் என்னவெனப் பார்ப்போம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள உடையார்விளையில் சாலையோரம் நாராயணசாமி கோயில் என்றொரு கோயில் அரசு நிலத்தில் உள்ளது. இந்த கோயில் அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாகவும் அதனால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு செல்ல கோயிலை இடித்து பாதை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், "அரசு நிலத்தில் உள்ள கோயிலின் சுவரை இடித்துப் பாதை அமைத்துக் கொடுக்க" உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை தக்கலை உதவிக் கோட்ட அலுவலர் எல்.அந்தோணி சேவியர், இளநிலை அலுவலர் சி.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தனர். இதற்குக் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் அவ்விடத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக் கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் திருவட்டாறு காவல் சரகத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் எட்வின் ஆகிய 3 பேரும் சாலையோரம் நின்று, இடிப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து அவர்கள் 3 பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பொறியாளர் அந்தோணி சேவியர் படுகாயம் அடைந்துச் சிகிச்சைக்காக நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் மீது காரை மோதவிட்டதாகவும், அந்தக் காரை ஓட்டியவர் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார், அவரது வழக்கறிஞர் ரசல்ராஜ் உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் அர்ஜுனனும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் அரசு ஆவணத்திற்காக ஆக்ரமிப்பு அகற்றும் பணியினை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வீடியோ பதிவில் அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றக் காட்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.
http://ibnlive.com/videos/58815/officials-want-security-after-highway-murder-attempt.html
தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.
http://ibnlive.com/videos/58815/officials-want-security-after-highway-murder-attempt.html
Friday, February 8, 2008
அமெரிக்கா நடத்துவது இஸ்லாத்திற்கு எதிரான போர்: முன்னாள் US அட்டர்னி ஜெனரல்

ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….
"சர்வதேச சமூகம்" என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப் படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் "புதிய உலக நியதி"யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.
படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…?
இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும். தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. "வியாபாரமயமாக்கல்" மற்றும் 'பொருள் முதல் வாதம்' முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் 'கலாச்சாரம்' ஆகியவைதான்.
ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..
'உலகமயமாக்கலின்' தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.
புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?
பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.
உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.
பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.
இராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள...கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?
இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…
எப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா?
பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை முற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.
இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?
இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.
உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. 'மார்க் குவைன்' என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் 'தேவையில்லாத தேவைகள்' பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.
இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.
அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.
அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.
இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
நன்றி: சமரசம் 1-15 பிப்ரவரி 2008 இதழ்
Wednesday, February 6, 2008
கைது செய்யப்பட்ட இந்து தீவிரவாதிகள்!!!!
திருநெல்வேலி : தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில்10 முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் கடந்த மாதம் 24ம் தேதி பைப் வெடிகுண்டு வெடித்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை குண்டு வைத்தாக தென்காசி மலையான் தெரு ரவி பாண்டியன் (42) செண்பக விநாயகர்கோவில் தெரு குமார்(எ)கேடிசி குமார் (28) செங்கோட்டை ஆற்றங்கரை தெரு நாராயணசர்மா (26) என்ற முன்று இந்து தீவரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்று தீவரவாதிகளில் ரவி பாண்டியன் என்ற தீவிரவாதியின் சகோதரர்கள் அன்மையில் நடைபெற்ற குழு மோதலில் கொல்லப்பட்டனர். காவல்துறை விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.மத கலவரத்தை தூண்டும் விதமாக ஆர்;.எஸ்.எஸ் அலுவலகத்திலும் புதிய பேருந்து நிலையத்திலும் டைம்பாம் வகை வெடிகுண்டுகளை தயாரித்து இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். முதலில் இவர்கள் தயாரித்த வெடிகுண்டுகளை பாபநாசம் மலைப்பகுதியில் வெடித்து சோதணை செய்துள்ளiர்.இந்;த தீவிரவாதிகள் 14 டைம்பாம்கள் தயாரித்துள்ளனர்.(வெடிகுண்டு
தயாரிப்பது இந்த தீவிரவாதிகளுக்கு ஒன்றும் புதியது கிடையாது நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள் சார்ந்த அமைப்புகள் தான் முழுக்காரணம்.) தயாரித்த வெடிகுண்டுகளில் நான்கு குண்டுகள் உபயோகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குண்டு கைப்பற்றி செயழிக்க செய்துள்ளனர். மேலும் உள்ள பல வெடிகுண்டுகளை எந்த கோவில்களில் வைத்து வெடிக்க செய்ய உள்ளனர் என்று காவல்துறை விசாரணை நடத்தி கைப்பற்ற வேண்டும்.கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் நோக்கம் மத கலவரத்தை துண்ட வேண்டும் அதன் முலம் இசுலாமியர்களை கொன்றுஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் (உதாரணம்: குஜராத் கலவரம்) நாட்டில் நடைபெற்ற பல மதகலவரத்திற்கு முதற் முழு காரணம் இத்தகைய இந்து தீவிரவாதிகள் தான் என்று கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மத கலவரத்தை தூண்டுதல் வெடிகுண்டு தயாரித்தல் வெடிகுண்டு தடை சட்டம் போன்ற வழக்கிலும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவேண்டும்.மேலும் தமிழகத்தில் உள்ள இந்து முண்ணணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்கள் உறுப்பினர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தி மேலும் உள்ள ஆயிரகனக்காக வெடிகுண்டுகளையும் கைப்பற்றி நாட்டில் மேலும் குண்டுவெடிப்புக்கள் நடைபெறாமல் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற நடுநிலையாளர்களின் எண்ணம்.
போராளி
தயாரிப்பது இந்த தீவிரவாதிகளுக்கு ஒன்றும் புதியது கிடையாது நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள் சார்ந்த அமைப்புகள் தான் முழுக்காரணம்.) தயாரித்த வெடிகுண்டுகளில் நான்கு குண்டுகள் உபயோகபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குண்டு கைப்பற்றி செயழிக்க செய்துள்ளனர். மேலும் உள்ள பல வெடிகுண்டுகளை எந்த கோவில்களில் வைத்து வெடிக்க செய்ய உள்ளனர் என்று காவல்துறை விசாரணை நடத்தி கைப்பற்ற வேண்டும்.கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் நோக்கம் மத கலவரத்தை துண்ட வேண்டும் அதன் முலம் இசுலாமியர்களை கொன்றுஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் (உதாரணம்: குஜராத் கலவரம்) நாட்டில் நடைபெற்ற பல மதகலவரத்திற்கு முதற் முழு காரணம் இத்தகைய இந்து தீவிரவாதிகள் தான் என்று கருத்தில் கொண்டு மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மத கலவரத்தை தூண்டுதல் வெடிகுண்டு தயாரித்தல் வெடிகுண்டு தடை சட்டம் போன்ற வழக்கிலும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவேண்டும்.மேலும் தமிழகத்தில் உள்ள இந்து முண்ணணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்கள் உறுப்பினர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தி மேலும் உள்ள ஆயிரகனக்காக வெடிகுண்டுகளையும் கைப்பற்றி நாட்டில் மேலும் குண்டுவெடிப்புக்கள் நடைபெறாமல் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் என்போன்ற நடுநிலையாளர்களின் எண்ணம்.
போராளி
Saturday, February 2, 2008
பல்கீஸ் பானுவுக்கு கிடைத்தது நீதி! மற்ற வழக்குகளின் கதி?
குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பல்கீஸ்பானுவுக்கு நீதிகிடைத்தது. பானுவை பாலியல் வன்முறைக்கு இலக்காக்கிய கயவர்கள் 11 பேருக்கு ஆயுள்தண்டனை போதாது அவர்களுக்கு கொடிய தண்டனைகள் வழங்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று பல்கீஸ்பானுவின் கணவர் யாகூப் ரசூல் தெரிவித்தார்.
நியாயம் கிடைத்துவிட்டது. நீதி வென்றுவிட்டது என்றெல்லாம் மனித உரிமை அமைப்புகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், தீர்ப்புகள் வெளிவந்த உடன் பல்கீஸ்பானு மனம் வெதும்பி தெரிவித்த கருத்து கல்நெஞ்சங்களையும் கண்ணீர் வடிக்கும் வண்ணம் இருந்தது. நான் எனது கிராமத்துக்கு மீண்டும் செல்ல மாட்டேன். எனக்குச் சொந்தமானவை அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. எனது நிலம் மட்டும்தான் அங்குள்ளது. என்னை விரட்டியவர்கள் எங்களது குடும்பத்தினரைக் கொன்று குவித்தவர் கள் எல்லோரும் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள் என்று கூறும் பல்கீஸ் பானு, பிரச்சினையின் பயங்கரக் கோணத்தை சுட்டிக் காட்டுகிறார். காவல் துறையினர் உட்பட 14 பேர் பயங்கரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக் கின்றனர். இத்தகைய பயங்கரக் குற்ற வாளிகளை பின்னாலிருந்து இயக்கியவர் கள் யார்? ஊக்கமளித்தவர்கள் யார்? காப்பற்றியவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பதை எண்ணும் போது இதன் பின்னணியில் உள்ளவர் களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் பல்கீஸ்பானு வழக்கு வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு பெஸ்ட் பேக்கரி வழக்கும் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் பேரில் அம்பலமானது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நரோடா பாட்டியா படுகொலைகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குல்பர்க் சொஸைட்டி, நரோடா பாட்டியா, ஒடி மற்றும் சர்தார்புரா வழக்குகள் உள்பட பல வழக்கு கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. 'தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி காக்கும் அமைப்பு', முக்கிய வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகொள் விடுத்தன. பெரும்பாலான வழக்குகளின் கோப்புகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது.
பெஸ்ட் பேக்கரி வழக்கு குஜராத்தில் நடந்தபோது குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மனித உரிமை இயக்கங்கள் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நியாயம் பிறக்க வழிசெய்தன. பல்கீஸ் பானு வழக்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
2002 பிப்ரவரி 28ஆம் நாளில் குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த படுகொலைக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கும் வழியைக் காணோம். முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 70 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 31 பேரை இன்னும் காணவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் நீதி கேட்டு இன்னும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கெட்டுகளில் ஏறிவருகிறார். அன்று மாநில காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே நிலைமையை கட்டுப்படுத் தாததோடு வெறியர்களை சம்பவ இடத்துக்கு சப்ளை செய்திருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர்களில் 41 பேருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. நரோடாபாட்டியா வில் நூரானி மஸ்ஜிதில் 91 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பெண் களும் குழந்தைகளுமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதற்கு முழு முதற்காரணமான 45 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை
குஜராத்துக்கு வெளியே நிலுவையில் இருக்கும் வழக்குகள் 13
குஜராத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 4,562
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 2,037
போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குஜராத் அரசால் கோப்புகள் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,032.
உச்சநீதிமன்றம் தலையீட்டின் பேரில் மீண்டும் தொடங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2000
அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் மூலம் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் 830.
புதிதாக தொடங்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை 59.
பழைய வழக்குகளின் அடிப்ப டையில் புலனாய்வு செய்ததின் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15.
குற்றங்கள் இழைத்த உயர் அதிகாரி களின் மீது நோட்டிஸ் அனுப்பிய வழக்குகளின் எண்ணிக்கை 114, 10 கொலை வழக்குகள். 10க்கும் மேற்பட் டோரைக் கொன்ற வழக்குகள் 11, கற்பழிப்பு வழக்குகள் 43, கொள்ளை யடித்தல் மற்றும் தீ வைத்தல் சம்பவம் தொடர்பான வழக்குகள் 3,800.
நன்றி:http://www.tmmkonline.org/tml/others/108669.htm
நியாயம் கிடைத்துவிட்டது. நீதி வென்றுவிட்டது என்றெல்லாம் மனித உரிமை அமைப்புகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், தீர்ப்புகள் வெளிவந்த உடன் பல்கீஸ்பானு மனம் வெதும்பி தெரிவித்த கருத்து கல்நெஞ்சங்களையும் கண்ணீர் வடிக்கும் வண்ணம் இருந்தது. நான் எனது கிராமத்துக்கு மீண்டும் செல்ல மாட்டேன். எனக்குச் சொந்தமானவை அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. எனது நிலம் மட்டும்தான் அங்குள்ளது. என்னை விரட்டியவர்கள் எங்களது குடும்பத்தினரைக் கொன்று குவித்தவர் கள் எல்லோரும் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள் என்று கூறும் பல்கீஸ் பானு, பிரச்சினையின் பயங்கரக் கோணத்தை சுட்டிக் காட்டுகிறார். காவல் துறையினர் உட்பட 14 பேர் பயங்கரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக் கின்றனர். இத்தகைய பயங்கரக் குற்ற வாளிகளை பின்னாலிருந்து இயக்கியவர் கள் யார்? ஊக்கமளித்தவர்கள் யார்? காப்பற்றியவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பதை எண்ணும் போது இதன் பின்னணியில் உள்ளவர் களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் பல்கீஸ்பானு வழக்கு வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு பெஸ்ட் பேக்கரி வழக்கும் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் பேரில் அம்பலமானது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நரோடா பாட்டியா படுகொலைகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குல்பர்க் சொஸைட்டி, நரோடா பாட்டியா, ஒடி மற்றும் சர்தார்புரா வழக்குகள் உள்பட பல வழக்கு கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. 'தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி காக்கும் அமைப்பு', முக்கிய வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகொள் விடுத்தன. பெரும்பாலான வழக்குகளின் கோப்புகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது.
பெஸ்ட் பேக்கரி வழக்கு குஜராத்தில் நடந்தபோது குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மனித உரிமை இயக்கங்கள் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நியாயம் பிறக்க வழிசெய்தன. பல்கீஸ் பானு வழக்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
2002 பிப்ரவரி 28ஆம் நாளில் குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த படுகொலைக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கும் வழியைக் காணோம். முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 70 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 31 பேரை இன்னும் காணவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் நீதி கேட்டு இன்னும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கெட்டுகளில் ஏறிவருகிறார். அன்று மாநில காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே நிலைமையை கட்டுப்படுத் தாததோடு வெறியர்களை சம்பவ இடத்துக்கு சப்ளை செய்திருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர்களில் 41 பேருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. நரோடாபாட்டியா வில் நூரானி மஸ்ஜிதில் 91 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பெண் களும் குழந்தைகளுமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதற்கு முழு முதற்காரணமான 45 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை
குஜராத்துக்கு வெளியே நிலுவையில் இருக்கும் வழக்குகள் 13
குஜராத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 4,562
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 2,037
போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குஜராத் அரசால் கோப்புகள் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,032.
உச்சநீதிமன்றம் தலையீட்டின் பேரில் மீண்டும் தொடங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2000
அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் மூலம் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் 830.
புதிதாக தொடங்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை 59.
பழைய வழக்குகளின் அடிப்ப டையில் புலனாய்வு செய்ததின் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15.
குற்றங்கள் இழைத்த உயர் அதிகாரி களின் மீது நோட்டிஸ் அனுப்பிய வழக்குகளின் எண்ணிக்கை 114, 10 கொலை வழக்குகள். 10க்கும் மேற்பட் டோரைக் கொன்ற வழக்குகள் 11, கற்பழிப்பு வழக்குகள் 43, கொள்ளை யடித்தல் மற்றும் தீ வைத்தல் சம்பவம் தொடர்பான வழக்குகள் 3,800.
நன்றி:http://www.tmmkonline.org/tml/others/108669.htm
Subscribe to:
Posts (Atom)