Saturday, February 2, 2008

பல்கீஸ் பானுவுக்கு கிடைத்தது நீதி! மற்ற வழக்குகளின் கதி?

குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பல்கீஸ்பானுவுக்கு நீதிகிடைத்தது. பானுவை பாலியல் வன்முறைக்கு இலக்காக்கிய கயவர்கள் 11 பேருக்கு ஆயுள்தண்டனை போதாது அவர்களுக்கு கொடிய தண்டனைகள் வழங்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று பல்கீஸ்பானுவின் கணவர் யாகூப் ரசூல் தெரிவித்தார்.

நியாயம் கிடைத்துவிட்டது. நீதி வென்றுவிட்டது என்றெல்லாம் மனித உரிமை அமைப்புகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், தீர்ப்புகள் வெளிவந்த உடன் பல்கீஸ்பானு மனம் வெதும்பி தெரிவித்த கருத்து கல்நெஞ்சங்களையும் கண்ணீர் வடிக்கும் வண்ணம் இருந்தது. நான் எனது கிராமத்துக்கு மீண்டும் செல்ல மாட்டேன். எனக்குச் சொந்தமானவை அனைத்தும் கொள்ளையிடப்பட்டன. தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. எனது நிலம் மட்டும்தான் அங்குள்ளது. என்னை விரட்டியவர்கள் எங்களது குடும்பத்தினரைக் கொன்று குவித்தவர் கள் எல்லோரும் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள் என்று கூறும் பல்கீஸ் பானு, பிரச்சினையின் பயங்கரக் கோணத்தை சுட்டிக் காட்டுகிறார். காவல் துறையினர் உட்பட 14 பேர் பயங்கரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக் கின்றனர். இத்தகைய பயங்கரக் குற்ற வாளிகளை பின்னாலிருந்து இயக்கியவர் கள் யார்? ஊக்கமளித்தவர்கள் யார்? காப்பற்றியவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள் என்பதை எண்ணும் போது இதன் பின்னணியில் உள்ளவர் களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் பல்கீஸ்பானு வழக்கு வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு பெஸ்ட் பேக்கரி வழக்கும் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் பேரில் அம்பலமானது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நரோடா பாட்டியா படுகொலைகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குல்பர்க் சொஸைட்டி, நரோடா பாட்டியா, ஒடி மற்றும் சர்தார்புரா வழக்குகள் உள்பட பல வழக்கு கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. 'தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி காக்கும் அமைப்பு', முக்கிய வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகொள் விடுத்தன. பெரும்பாலான வழக்குகளின் கோப்புகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது.
பெஸ்ட் பேக்கரி வழக்கு குஜராத்தில் நடந்தபோது குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மனித உரிமை இயக்கங்கள் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று நியாயம் பிறக்க வழிசெய்தன. பல்கீஸ் பானு வழக்கும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
2002 பிப்ரவரி 28ஆம் நாளில் குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த படுகொலைக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கும் வழியைக் காணோம். முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 70 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 31 பேரை இன்னும் காணவில்லை. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் நீதி கேட்டு இன்னும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கெட்டுகளில் ஏறிவருகிறார். அன்று மாநில காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே நிலைமையை கட்டுப்படுத் தாததோடு வெறியர்களை சம்பவ இடத்துக்கு சப்ளை செய்திருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர்களில் 41 பேருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. நரோடாபாட்டியா வில் நூரானி மஸ்ஜிதில் 91 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பெண் களும் குழந்தைகளுமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதற்கு முழு முதற்காரணமான 45 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை

குஜராத்துக்கு வெளியே நிலுவையில் இருக்கும் வழக்குகள் 13

குஜராத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் 4,562

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 2,037

போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குஜராத் அரசால் கோப்புகள் மூடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,032.


உச்சநீதிமன்றம் தலையீட்டின் பேரில் மீண்டும் தொடங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2000

அவ்வாறு தொடங்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் மூலம் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் 830.

புதிதாக தொடங்கப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை 59.

பழைய வழக்குகளின் அடிப்ப டையில் புலனாய்வு செய்ததின் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 15.

குற்றங்கள் இழைத்த உயர் அதிகாரி களின் மீது நோட்டிஸ் அனுப்பிய வழக்குகளின் எண்ணிக்கை 114, 10 கொலை வழக்குகள். 10க்கும் மேற்பட் டோரைக் கொன்ற வழக்குகள் 11, கற்பழிப்பு வழக்குகள் 43, கொள்ளை யடித்தல் மற்றும் தீ வைத்தல் சம்பவம் தொடர்பான வழக்குகள் 3,800.

நன்றி:http://www.tmmkonline.org/tml/others/108669.htm