Sunday, March 30, 2008

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!

கள்ளஉறவுக்கு தயார் ஆகும் ஜெயலலிதா !!!!!!!!!
தமிழர்களை ஏமாற்றி தனது அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் கன்னடக்காரி வந்தேறி ஜெயலலிதா இப்பெழுதும் மற்றொரு ஏமாற்று வேளையை ஆரம்பித்துள்ளார். சுத்தமான குடிநீர் இன்றி நச்சுக்கலந்த நிலத்தடி நீரைக் குடித்துக்கொண்டு வாழ்கின்ற லட்சகணக்கான தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி அத்திட்டத்தை துவங்கியது தமிழக அரசு.திட்டம் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ஒகெனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று எ(இ)டியுரப்பா என்ற தேச துரோகி தமிழக எல்லைக்குள் தனது நச்சு விதைகளை கக்கிச்சென்றுள்ளன். இந்த தேச துரோகியின் பா.ஜ.க கட்சியுடன் தான் தமிழின விரோதி ஜெயலலிதாவின் அ(அம்மா)தி.மு.க வருகின்ற கர்னாடகா சட்டமன்ற தேர்தலில் உறவு கொள்ள தயாராகி வருகின்றது. இந்த செய்தியை இது வரை அவர் மறுக்கவில்லை. இந்த கள்ளஉறவை மறைத்து ஒகெனக்கலில் மக்களை ஏமாற்ற கர்னாடகாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.இந்த இரண்டு மக்கள் விரோத கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கனிக்க வேண்டும்.ஜெயலலிதாவிற்கு தமிழின விரோதி என்ற பட்டத்தை கலைஞர் கொடுக்கவேண்டும் என்று நமது வலையுலக பதிவர் ஒருவர் எழுதினார், கலைஞர் தான் கொடுக்கவேண்டும் என்றல்ல இனஉணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழின விரோதி ஜெயலலிதா என்றே அழைக்கவேண்டும்.தமிழர்களை ஏமாற்றும் இந்த தமிழின விரோதியை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும்.

Monday, March 3, 2008

சிவனடியார் ஆறுமுகசாமி மீது பார்பணர்கள் கொலை வெறி தாக்குதல்....................

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி சென்ற போது போலீசாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தாக்கப்பட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி முயன்றார். அதற்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தடை பிறப்பித்தார். ஆனால் ஆறுமுகசாமி தரப்பில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் பூஜை காலங்களைத் தவிர பிற நேரங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத் துறை செயலரிடம் தீட்சிதர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்தனர். நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என்று கடந்த 29ம் தேதி அறநிலையத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டார். தீர்ப்பின்படி சிவனடியார் ஆறுமுகசாமி நேற்று தமிழில் பாட தயாரானார். அவருடன் மாவட்ட மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நேற்று தெற்கு வீதியில் கூடினர்.

இதனால் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆறுமுகசாமி தெற்கு வீதியில் இருந்து யானை மீது அமர்ந்தபடி நடராஜர் கோவிலின் பாரம்பரிய இசை முழங்க அழைத்து வரப்பட்டார். கோவிலுக்குள் நுழைய முயன்ற ஆறுமுகசாமியைப் போலீசார் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 3 பேர் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியும் என்றனர்.

இதனால் போலீசாருக்கும் ஆறுமுகசாமி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆறுமுகசாமி தரப்பினர் தெற்கு சன்னதி கோவில் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். 30 நிமிடம் தர்ணா போராட்டத்திற்கு பிறகு 25 பேர் செல்லலாம் என போலீசார் கூறினர். அதனைத் தொடர்ந்து காலை 11.25 மணிக்கு ஆறுமுகசாமி வக்கீல்கள் ராஜி செந்தில் உள்ளிட்ட 25 பேர் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலுக்குள் குவிந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகசாமி கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடைக்கு நுழைய முயன் றார். அப்போது தீட்சிதர் தரப்பு வக்கீல்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் அரசு ஆணையை வக்கீல் களிடம் காட்டினர். அதனை தொடர்ந்து வக்கீல்கள் ஆறுமுகசாமி உள்ளே செல்ல ஒப்புக்கொண்டனர். ஆனால் ஆறுமுக சாமி மற்றும் போலீசாரை தீட்சிதர்கள் தடுத்தனர். அவர்களை எஸ்.பி. பிரதீப்குமார் விலக்கி விட்டார். அப்போது எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினர். இதனால் போலீசாருக்கும்- தீட்சிதர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் தீட்சிதர்களை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து ஏ.எஸ்.பி. செந்தில்வேலன் மற்றும் போலீசார் கோவில் சம்பிரதாயப்படி சட்டையை கழற்றிவிட்டு ஆறுமுகசாமியை கோவிலுக்குள் மதியம் 12.04 மணிக்கு அழைத்து சென்றனர். அதனை 50க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க வந்த தீட்சிதர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றினர். தீட்சிதர்கள் போலீசாரை தாக்கி கடித்து குதறினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் போர்களம் போல காட்சியளித்தது.

சிற்றம்பல மேடைக்கு சென்ற ஆறுமுகசாமி தேவாரம் பாடிவிட்டு மீண்டும் பகல் 12.14 மணிக்கு வெளியே வந்தார். அப்போது கோவிலுக்குள் கூடியிருந்த மக்கள் தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்று கோஷங்கள் எழுப்பினர். ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு முன் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பலத்த சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மூன்று முறை கீழே விழுந்த எஸ்.பி.திருச்சிற்றம்பல மேடையில் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் பலவந்தமாக தள்ளி விட்டனர். இதில் அவர் மூன்று முறை படிகட்டில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் அருகில் இருந்து அவரது பாதுகாவலர் மற்றும் போலீசார் எஸ்.பி. தரையில் விழுந்துவிடாமல் தாங்கி பிடித்துக் கொண்டனர்.தீட்சிதர்களின் செயலைப் பார்த்த போலீசார் தனது உயர் அதிகாரியைப் பிடித்துத் தள்ளும் தீட்சிதர்களை ஒவ்வொருவராக குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். எஸ்.பி.யைக் காப்பாற்ற சென்ற போலீசாரையும் தீட்சிதர்கள் கீழே தள்ளிவிட்டனர்.

தீட்சிதர்கள் மீது வழக்கு: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னியப்பெருமாள் சிதம்பரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆறுமுகசாமி உள்ளே செல்ல தீட்சிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.ஆறுமுகசாமி மற்றும் ஐந்து பேரை மிக வலுவோடு தீட்சிதர்கள் எதிர்த்தனர். அதனால் எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஆறுமுக சாமியைப் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதனை தீட்சிதர்கள் தடுத்ததால் சிறு கைகலப்பு ஏற்பட்டது. ஆறுமுகசாமி 15 நிமிடம் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தார். இதன்மூலம் அரசாணையை நிறைவேற்றியுள்ளோம். சிறப்பான போலீஸ் பாதுகாப்பால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அரசு பணியை செய்யவிடாமல் குறுக்கிடுதல் பலபிரயோகம் செய்தல் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்படும். அரசு உத்தரவுபடி மீண்டும் தமிழில் தேவாரம் பாட சட்டம் ஒழுங்கு சாதகமாக உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பிற்கான அனுமதியை போலீசார் வழங்குவர்.இவ்வாறு வன்னியப்பெருமாள் கூறினார்.

தேவாரம் பாடவில்லை ஆறுமுகசாமி பேட்டி: ஹசிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவில்லை' எனஇ ஆறுமுகசாமி கூறினார்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீசாருக்கும் - தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவுக்கு இடையில் தேவாரம் பாடிய பின்னர் வெளியே வந்த ஆறுமுகசாமி கூறியதாவது:அரசு உத்தரவுபடி தமிழில் தேவாரம் பாட இன்று (நேற்று) நான் சென்றேன். ஆனால்இ எம்பெருமானை என்னால் பார்க்க முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் வெள்ளி மேடையில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். தீட்சிதர் தரப்பு வக்கீல்இ இங்கு வந்து தான் பாட வேண்டுமா என்று திட்டினார்.

தமிழை வளர்ப்போம்இ பாதுகாப்போம் என்று முதல்வரும் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர். ஆனால்இ சிதம்பரத் தில் அரசு உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. நான் உள்ளே சென்று தேவாரம் பாடவில்லை. இது வெட்க கேடாக உள்ளது.என்னை தேவாரம் பாட தீட்சிதர்கள் விடவில்லை. உயிர் பிழைத்து வெளியே வந்துள்ளேன். போலீஸ் பாதுகாப்பு சரியில்லை. என்னை தீட்சிதர்கள் அடித்து என் மூக்கு கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டனர். என் மக்களுடன் சென்று நான் தேவாரம் பாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுமுகசாமிஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி:ஆறுமுகசாமி தரப்பினர் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை தெற்கு வீதிஇ கோவில் நுழைவு வாயிலில்இ கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால்இ அவர்கள் கேட்கவில்லை. அப்போதுஇ போலீசார் மீதுஇ ஆறுமுகசாமி தரப்பினர் கல் வீசினார். இதில்இ போலீஸ்காரர் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் ஆவேசமடைந்த போலீசார்இ ஆறுமுகசாமி தரப்பினர் மீது திடீரென தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால்இ தெற்கு வீதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


செய்தி நன்றி :www.dinamalar.com

Sunday, March 2, 2008

சொஹ்ராபுதீன் கொலையில் வன்சாரா முக்கிய குற்றவாளி - விசாரணை குழு அறிக்கை!


காந்திநகர்: சொஹ்ராபுதீனை போலி மோதல் நாடகம் நடத்தி சுட்டுக் கொலை செய்த வழக்கில் குஜராத் முன்னாள் காவல்துறைத் துணை இயக்குனர் D.G.வன்சாராவை முக்கியக் குற்றவாளி எனக் கூறி விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இக்கொலைக்கான சதி ஆலோசனையில் முக்கிய பங்கு வகித்தது வன்சாரா என விசாரணை குழுவின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது. மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஹாதிய்யா விசாரணை அறிக்கையினை வாக்குமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சொஹ்ராபுதீன் கொலை வழக்கில் கடந்த ஏப்ரல் 2007 ல் கைது செய்யப்பட்ட வன்சாராவிற்கு உறவினரின் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக மூன்று தினங்களுக்குள் கட்டாயம் திரும்ப வேண்டியக் கடும் நிபந்தனையில் கடந்த பிப்ரவரி 24 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. முழுப்பிணைக்கு வன்சாரா மனு அளித்திருந்தப் போதிலும் இவ்வழக்கை விசாரிக்கும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை (குற்றவியல் பிரிவு) அதனை எதிர்த்திருந்தது. "தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த வன்சாரா,
சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கும் அவரின் மனைவி கௌசர்பீயைக் கொன்று குற்றத்தின் ஆதாரங்களை அழித்ததற்கும் தலைமையாக இருந்துச் செயல்பட்டவர் எனவும் அவரை ஜாமீனில் விட்டால் விசாரணையைப் பாதிக்கும் விதத்தில் அவரின் நடவடிக்கைகள் அமைவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது" எனவும் மத்தியப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அதற்குக் காரணம் கூறியது. நீதிமன்றத்தில் வன்சாராவின் ஜாமீனுக்கு எதிராக வாக்குமூலம் சமர்பித்த CID இன்ஸ்பெக்டர் ஹாதியா, "சொஹ்ராபுதீனைப் போலி என்கவுண்டர் மூலம் 2005 நவம்பரில் கொலை செய்தனர். அதற்கு இரு தினங்களுக்குப் பின் அவரின் மனைவி கௌசர்பீயையும் கொலை செய்தனர். இது அதிகாரத்தின் துர்நடத்தை அல்லாமல் வேறொன்றும் இல்லை" என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் வேளையில் கூறினார். இதனால் வன்சாராவுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்."விசாரணை வேளையில் கிடைத்த ஆதாரங்கள் வன்சாராவின் சதி ஆலோசனையையும் இவ்வழக்கில் அவரின் பங்கினைக் குறித்தும் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுக்ராபுதீன் கொலை செய்யப்பட்ட விபரமறிந்த அவரின் மனைவி கௌசர்பீயை உயிரோடு விட்டால் அது அவர்களுக்குப் பாதகமாக அமையும் என்பதை வன்சாரா நன்றாக அறிந்திருந்தார். வன்சாராவின் கட்டளைப் படி காந்திநகரில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் வைத்து கௌசர்பீ கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடலை வன்சாராவின் பிறந்த இடமான சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள இலோளில் புதைத்தனர். இலோளில் வன்சாராவுக்கு எதிராக எவரும் சப்தமுயர்த்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே கௌசர்பீயின் உடலை அங்குக் கொண்டு சென்று புதைக்கத் தீர்மானித்தனர்" என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கௌசர்பீயின் உடலைப் புதைத்தது தொடர்பான காவல்துறை வாகன ஓட்டுனரின் வாக்குமூலம் நீதிபதியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சாட்சி பின்னர் நீதிமன்ற விசாரணை வேளையில் சாட்சியம் மாற்றிக் கூறினாலும் சாட்சியின் வாக்குமூலம் நிலைபெறும். அதே சமயம் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மற்ற இரு குற்றவாளிகளும் காவல்துறை அதிகாரிகளுமான எம்.என். தினேஷ் மற்றும் என்.கே. அமின் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை அடுத்த மார்ச் 25 அன்று எடுத்துக் கொள்ள உச்சநீதி மன்றம் தீர்மானித்துள்ளது. ராஜஸ்தான் பிரிவில் உள்ள IPS அதிகாரியான M.N. தினேஷ், சொஹ்ராபுதீனைப் போலி மோதலில் கொலை செய்ய உதவி செய்ததாகவும் குஜராத்திலுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) அமின் கௌசர்பீயின் உடலை மறைக்க உதவி செய்ததாகவும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.விசாரணைக் குழுவின் அறிக்கையின் மூலமாகவும் மற்றொரு முறை சதிச்செயல் என நிரூபிக்கப்பட்டச் சொஹ்ராபுதீன் கொலை விவகாரத்தைத் தான், கடந்த குஜராத் தேர்தலின் பொழுது, குஜராத் இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி "தீவிரவாதியைக் கொலை செய்வதுத் தவறா?" என நிறைந்திருந்தத் தனது ஆதரவாளர்களின் முன்னிலையில் கேட்டு சொஹ்ராபுதீனைக் கொலை செய்ததற்கு மக்கள் அங்கீகாரம் பெற முயற்சி செய்தார் என்பதும் அதனையே தனது தேர்தல் வெற்றிக்குப் பிரதான பகடைக்காயாக உபயோகித்து மக்களிடம் இன வெறுப்பைத் தூண்டி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:www.satyamargam.com