வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
7 வாழையின் தண்டு, பூ, பழம் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவையாகும். வாழைப்பழம் உடம்பை உரமாக்குவதுடன் நல்ல மல மிளக்கியாகவும் செயல்படுகின்றது. பித்தம், காமாலையை தடுக்கும். வறட்சியை அகற்றும்.
8 வாழைப்பழம் விந்துவை பெருக்கி மூலத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம் குளிர்ச்சியான பழம். உடம்பு உஷ்ணம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்க போகும் முன்பு வாழைப் பழம் ஒன்று சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.
9 மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வர- மலச்சிக்கல் போயே போய்விடும்.
10 காய்ச்சல், மற்றும் வயிற்றுப்போக்கு சமயத்தில் மட்டும் வாழைப்பழத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
11 புதுமண தம்பதிகள்- ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பும் சூடேறாமல் இருக்கும்.
12 முதுமையை தள்ளிப்போடும் விருப்பமுள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் உண்டு வரலாம். இவர்களுக்கு முகத்தில் தோல் சுருக்கம், தொய்வுகள் ஏற்படாது.
13 மூல நோய் உள்ளவர்களும், மலச்சிக்கல் உள்ளவர்களும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை தீரும்.
14 பாலுடன் வாழைப் பழம் சேர்த்து சாப்பிட அஜீரணம் சரியாகும்.
15 இளநீர் கலந்து சாப்பிட்டால் காச நோய் குணமாகும்.
16 சிறுநீரக நோய்களுக்கு நெல்லி சாறில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிட சரியாகும்.
17 பாலும், வாழைப்பழமும் விடாமல் சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை புண் ஏற்படுவதே இல்லை.
18 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விந்து பெருகும். மூலநோய் காணாமல் போகும்.
19 மூட்டு வலி குணமாக, தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுங்கள்.
20மலச்சிக்கல், வாய்வு உபத்திரவம், இரத்தச் சோகை, பொது பலவீனம், நோஞ்சான் உடம்புக்காரர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட நல்ல நன்மை கிட்டும்.
21 ஆண்களைவிட பெண் களுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய பழம் என்று ஆய்வுகள் சொல் கின்றன. பெண்களுக்கு மாத விடாய், பால் புகட்டுதல், மகப்பேறு போன்ற காரணங்களினால் அடிக்கடி கால்சிய பற்றாக் குறை ஏற்படும். கால்சிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பயன் பெறலாம்.
22 உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்களும் தினம் வாழைப்பழம் சாப்பிடலாம்.
23 வாரம் 2 முறை வாழைத்தண்டு சாறு அருந்தி வந்தால், குடல் சுத்தமாகும் சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ‘பேலன்ஸ்டு டயட்’ என்கிறார்கள்.இதில் இருக்கிற ‘செரடோனின்’ என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்கொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்கிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ‘U’ இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம் போன்ற கோளாறுகளுக்கு தடுப்பாகவும், தீர்வாகவும் பயனாகின்றது என்று கண்டுபிடித்துள்ளனர்.வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்துண்ணும் பழக்கம் தவறு என்பதை, பலரும் அறிவதில்ல. கிராம மக்கள் வாழைப்பழம் சாப்பிடும் முறையை உற்று நோக்கினால், ஓர் உண்மை புலப்படும். அவர்கள் தோலை கையில் வைத்துக் கொண்டு அதில் பிசிறு போல் வெண்மையாக ஒட்டிக் கொண்டு உள்ள நார்ப்படலத்தைக் கீறி வழித்து உண்பர். சிறு துவர்ப்புடன் இருக்கும் இந்த நார்ச் சத்தினால் குடலில் தங்கும் சூடு தணியும் என்று காரணம் கூறுவார்கள். அர்த்தமுள்ள இந்தப் பழக்கம் குடல் புண் வராமல் காக்கின்றது. ‘மலைவாழைப்பழம்’ மலச்சிக்கலை உடைக்கும்.‘செவ்வாழைப்பழம்’ உயிரணுக்களைப் பெருக்கும்.‘மஞ்சள் வாழைழப்பழம்’ குடல் புண்கள ஆற்றும்.‘பேயன் வாழைழப்பழம்’ அம்மைமநோயால் குடலில் சேரும் நஞ்சு, வேக்காடுகளை முறிக்கும்.‘அடுக்கு வாழைப்பழம்’ சரீரத்திற்கு அழகூட்டும்.‘மொந்தன் வாழைப்பழம்’ உடலின் வறட்சியைப் போக்கும்.‘பச்சை வாழைப்பழம்’ உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சளியைச் சேர்க்கும்.‘நேந்திரம் வாழைப்பழம்’ தோலுக்கு மினுமினுப்பைத் தரும்; தாய்ப்பாலைப் பெருக்கும்.இவ்வளவு சிறப்புடைய இந்தப் பழத்தை நான்கு பேர் சாப்பிடக் கூடாது.1. கடுமையான ஆஸ்துமா நோயாளிகள்.2. நீண்டகால சர்க்கரை நோயாளிகள்.3. கை, கால் வலிப்பு உள்ளவர்கள்.4. உடல் பருமன் மிக்கவர்கள்.வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.